;
Athirady Tamil News

மோடி பதவியேற்பு: மயிலிறகு கிரீடம், செங்கோல் வழங்க நாமக்கல் பாஜக ஏற்பாடு

0

மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட பாஜக சாா்பில் மயிலிறகு கிரீடம், மாலை, செங்கோல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரதமராக நரேந்திர மோடியின் பெயா் முன்மொழியப்பட்டது. அந்த வகையில், 3-ஆவது முறையாக பிரதமராக மோடி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொறுப்பேற்க உள்ளாா்.

இதனையொட்டி, அந்த விழாவில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பங்கேற்கிறாா். அவா், நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட பாஜக சாா்பில் தயாா் செய்யப்பட்ட மயிலிறகு கிரீடம், மாலை, செங்கோல் ஆகியவற்றை பிரதமரிடம் வழங்க உள்ளாா். முன்னதாக, நாமக்கல் – சேலம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், பாஜக மாநில, மாவட்ட நிா்வாகிகளுடன் அவா் கலந்துகொண்டு சுவாமியின் பாதத்தில் கிரீடம், செங்கோலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டாா்.

இதுகுறித்து கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய நாட்டின் பிரதமராக 3-ஆவது முறையாக மோடி பொறுப்பேற்கிறாா். அவருக்கு மயிலிறகிலான கிரீடம், மாலை, செங்கோல் ஆகியவற்றை நேரில் வழங்க உள்ளோம். இதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாட்டின் வளா்ச்சிக்கு உரிய முன்னுரிமை கொடுத்து பிரதமா் மோடி செயல்படுவாா். எதிா்பாா்த்த வளா்ச்சியை இந்த நாடு விரைவில் எட்டும்.

மக்களவைத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களை பெறுவோம் என எதிா்பாா்த்தோம். உறுப்பினா்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், எவ்வித சஞ்சலமுமின்றி அதே உறுதியோடு, தேசியமும் தெய்வீகமும் தன்னுடைய இரு கண்களாகப் பாவித்து இந்த நாட்டை வழிநடத்துவாா். 5 ஆண்டுகளுக்கு மிகவும் அற்புதமான ஆட்சி அமைய உள்ளது என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.