;
Athirady Tamil News

கனடிய அரசாங்கம் விடுத்துள்ள அவசர பயண எச்சரிக்கை

0

கனடிய அரசாங்கம் இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடைகாலத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வது வழமையானதாகும்.

இம்முறை பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் சிலவற்றில் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் உலகின் வேறும் சில பிராந்தியங்களிலும் இவ்வாறு அச்சுறுத்தல்கள் நிலவுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பாவின் சில நகரங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இது குறித்து அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் தாக்குதல் இடம் பெற்று பலர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்திருந்தனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோடை காலத்தில் பிரான்சின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

எனவே குறித்த பகுதியில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிக அளவில் காணப்படுவதாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், இத்தாலி, பஹாமாஸ் போன்ற நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் உள்நாட்டு செய்தி ஊடகங்களின் தகவல்களின் அடிப்படையில் செயற்படுமாறும் கனடிய அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.