;
Athirady Tamil News

இலங்கை போக்குவரத்துச் சபையின் சிறந்த சாரதி சிறந்த பொறிவலவர் விருது பெற்றோருக்கான கௌரவிப்பு

0

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்சாலை ஊழியர் நலன்புரிச்சங்கம் நடத்திய ஆண்டுவிழா நிகழ்வில் இலங்கையில் வடபிராந்திய போக்குவரத்துச் சபை நிலையில்; சிறந்த சாரதிக்கான விருது பெற்ற கொலின் (அச்சுவேலி) மற்றும் சிறந்த பொறிவலவருக்கான விருது பெற்ற பாலகிருஷ்ணவரன் (தெல்லிப்பழை) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை போக்குவரத்துச்சபை யாழ் சாலை ஊழியர்களின் பிள்ளைகளாக இருந்து தரம் 05 புலமைப் பரிசில் சித்தி, க.பொ..த. சாதாரண தரம் சிறந்த பெறுபேறு உயர்தரம் சிறந்த பெறுபேறு பெற்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

யாழ் சாலை முகாமையாளர் என் குணசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசனும் சிறப்பு விருந்தினராக யாழ். பேருந்து நிலைய ஓய்வுபெற்ற பொறுப்பதிகாரி என். லோகநாதனும் கௌரவ விருந்தினர்களாக வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் என். கேதீசனும் வடபிராந்திய செயலாற்றல் பிராந்திய முகாமையாளர் ஏ.ஜெ. லெம்பேட்டும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.