;
Athirady Tamil News

ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகு… 21 குழந்தைகள் உட்பட 80 பேர் உயிரிழப்பு!

0

காங்கோ நாட்டில் மாய்-நிடோம்பே மாகாணத்தில் உள்ள குவா ஆற்றில் மிகப்பெரிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் இரவு (10-06-2024) இடம்பெற்றுள்ளது.

முஷீ நகரில் இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி வந்த படகு, லெடிபா கிராமத்தின் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது.

படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழுந்த நிலையில் நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர். மற்றவர்கள் மூழ்கியுள்ளனர்.

விபத்து தொடர்பில் தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர். இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.

இன்றையதினம் (12-06-2024) மாலை நிலவரப்படி 21 குழந்தைகள் உள்பட 80க்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பலர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.