;
Athirady Tamil News

தபால் ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

நாட்டிலுள்ள தபால் ஊழியர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்படுவதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்கள் (12} ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்திருந்தனர்.

இதனையடுத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்துச்செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் விடுமுறை இரத்து
அஞ்சல் துறை தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், சுமார் 6000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், 4 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை எனவும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர்.

இதேவேளை, தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இதற்கு ஆதரவாக நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.