காரை ரிவர்ஸ் எடுத்த போது 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்! வைரல் காட்சி
சுற்றுலாத் தளத்தில் காரை பின்னோக்கி நகர்த்திய சுற்றுலாத் தலத்தில் இழந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் இதயம் உருக்கும் விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். சுவேதா தீபக் சுர்வாஸ் (23) என்ற அப்பெண் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள முயன்ற போது, கார் பாதையை விட்டு செங்குத்தான குன்றிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
On Camera, Woman Reverses Car Off #Maharashtra Cliff, Falls 300 Feet, Dies
Read Here: https://t.co/KRKKoWvbkh pic.twitter.com/lk2L3BtZHW
— NDTV (@ndtv) June 18, 2024
இறந்தவரின் நண்பர் சுராஜ் சஞ்சய் முலே (25) இந்த விபத்தை காணொளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்.
காணொளிப் பதிவில், சுவேதா பாதுகாப்பான தூரத்தில் காரை நிதானமாக ரிவர்ஸ் எடுத்துச் செல்வது தெரிகிறது.
சுவேதா மற்றும் சுராஜ் ஆகியோர் சுற்றுலாத் தலமாக அறியப்பட்ட Sulibhanjan மலைகளில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆனால், அவர் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது வேகம் அதிகரித்துவிட்டது. கிளட்ச் (clutch) போடுமாறு நண்பர் கத்தியும், காரை நிறுத்துவதற்கு ஓடிவந்தும் முடியவில்லை.
இந்த விபத்தில் சுவேதா உயிரிழந்தார். கார் பாதாளத்தில் சிதைந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.