;
Athirady Tamil News

சர்ச்சையை கிளப்பிய நடாஷாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய (Natasha Edirisuriya) மற்றும் புருனோ திவாகரா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தீர்ப்பானது இன்று (19.6.2024) கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் (Colombo Fort Magistrate Court) வழங்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை இழிவுபடுத்தினார்

2023 ஏப்ரல் மாதம், நகைச்சுவை நிகழ்ச்சியான “மோடிபிமானயா” (முட்டாள்களின் பெருமை) என்ற நிகழ்ச்சியின் மூலம் “பௌத்த மதத்தை இழிவுபடுத்தினார்” என்று குற்றம் சாட்டப்பட்ட, இலங்கையின் நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய, மே 28 அன்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.