வவுனியா மற்றும் பல பகுதிகளில் சத்தத்துடன் நிலநடுக்கம் – அச்சத்தில் உறைந்த மக்கள்
வவுனியா மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதை உணரக்கூடியதாக இருந்ததாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் ஜன்னல்கள் கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.
தமது வாழ்க்கையில் முதன் முறையாக இவ்வாறான அனுபவத்தை உணர்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.
முதல் இணைப்பு
இலங்கையில் வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மஹகனந்தராவ, ஹக்மன மற்றும் பல்லேகலை நில அதிர்வு நிலையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.