;
Athirady Tamil News

புனித ஹஜ் யாத்திரை : அதிக வெப்பத்தினால் 550 பேர் பலி

0

ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 இஸ்லாமிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சவூதி (Saudi Arabia) அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

வெப்பமான காலநிலை
இதனடிப்படையில், இறந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானோருக்கு நீர்ச்சத்து குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடும் வெப்பமான காலநிலையில் யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்ள முடியாமல் தவித்த நிலையில் அவர்களில் பலர் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.