;
Athirady Tamil News

உயிரிழந்த பெண்ணின் உடலை பதப்படுத்த முயன்ற பணியாளர்: அடுத்து நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம்

0

அமெரிக்க நகரமொன்றில், உயிரிழந்த பெண்ணொருவரின் உடலை இறுதிச்சடங்குக்காக தயார் செய்யத் தயாரானார் ஒரு பெண் பணியாளர்.

அப்போது, அவர் கண்ட ஒரு விடயம் அவரை அதிர்ச்சியடைய வைக்க, பயத்தில் துள்ளிக் குதித்துவிட்டார் அவர்.

இறுதிச்சடங்குக்காக தயார் செய்யத் தயாரான பெண்
அமெரிக்காவின் Nebraska மாகாணத்திலுள்ள Lincoln என்னும் நகரில் வாழ்ந்துவந்த Constance Glanz (74)என்னும் பெண், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 3ஆம் திகதி, காலை 9.44 மணிக்கு மரணமடைந்தார்.

அவரது உடல் இறுதிச்சடங்கு மையம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டது. பெண் பணியாளர் ஒருவர், Constanceஇன் உடலை இறுதிச்சடங்குக்காக தயார் செய்யும் முயற்சியைத் துவக்கினார்.

அப்போது திடீரென Constance மூச்சு விடுவதைக் கண்டு பயந்துபோன அந்தப் பணியாளர், பின்னர் சுதாரித்துக்கொண்டு அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்துக்கொண்டே ஆம்புலன்சை அழைத்துள்ளார்.

விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் Constanceஐ அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இரண்டாவது முறை மரணம்
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் உயிரிழந்துவிட்டார் Constance. அவரை யாரும் வேண்டுமென்றே உயிருடன் அடக்கம் செய்ய முயற்சி செய்யவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்.

இப்படி ஒரு அபூர்வ நிகழ்வை தன் வாழ்நாளில் கண்டதில்லை என்று கூறும் Chief Deputy Ben Houchin என்னும் அதிகாரி, இந்த சம்பவத்தின் பின்னால் குற்றச்செயல் எதற்குமான நோக்கம் எதுவும் இல்லை என்றாலும், என்ன நடந்தது என்பதை அறிய முழுவீச்சில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.