;
Athirady Tamil News

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன் கைது

0

யாழில் பதிவேற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாளினையும் யாழ்ப்பாணம் பொலிசார், இளைஞன் ஒருவரிடமிருந்து நேற்று(21) கைப்பற்றினர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிசார் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனமொன்றினை வழிமறித்து சோதனையிட்ட நிலையில் வாகனப்பதிவின்றி வாகனம் பயணித்தமை தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சந்தேக நபரது வீட்டிலிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.