;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் திடீரென உயிரிழக்கும் நாய்கள் மற்றும் காகங்கள்; மக்கள் குழப்பம்!

0

மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இச்சம்பவமானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென இறப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர்.

குறித்த நாய்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே இவ்வாரு உயிரிழந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

அதன்படி இதுவரை 8 நாய்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று நாய்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறித்த நாய்களுக்கு அப்பகுதியில் யாரோ நஞ்சு கலந்த உணவை வழங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் நாய்கள் மாத்திரமன்றி காகங்கள் மற்றும் கோழிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்லவேண்டும் எனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.