;
Athirady Tamil News

8000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வேலைவாய்ப்புகள் தொடர்பில் வெளியான தகவல்

0

மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8139 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மூன்றாண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் எண்ணிக்கை
இதேவேளை, தற்போது புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையும், எதிர்காலத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 11,048 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.