;
Athirady Tamil News

இளவரசி டயானாவின் சகோதரர் வெளிப்படுத்திய அந்த விடயம்… பெண் ஒருவர் கைது

0

இளவரசி டயானாவின் சகோதரர் Earl Spencer வெளிப்படுத்திய அந்த தகவல் தொடர்பில் தற்போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக
இளவரசி டயானாவின் சகோதரர் Earl Spencer வெளிப்படுத்தியுள்ள துஸ்பிரயோக விடயம் தொடர்பிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமக்கு 11 வயதாக இருக்கும் போது பாடசாலையில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக இளவரசி டயானாவின் சகோதரர் Earl Spencer வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த விவகாரத்தில் குற்றவியல் விசாரணையை துவங்கியுள்ளதாக தெரிவித்திருந்த நார்தம்ப்டன்ஷையர் பொலிசார், 67 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Maidwell Hall உண்டு உறைவிட பாடசாலை காலகட்டத்தில் தாம் அனுபவித்த அந்த துஸ்பிரயோகக் கொடுமைகள் தொடர்பில் Earl Spencer தமது சுயசரிதத்தில் விளக்கியிருந்தார்.

தற்போது 60 வயதாகும் Earl Spencer தாம் மட்டுமின்றி, சக மாணவர்கள் பலர் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதை அம்பலப்படுத்தியிருந்தார். மட்டுமின்றி, தம்மை கொடுமைப்படுத்திய அந்த நபருக்கு அப்போது 19 அல்லது 20 வயதிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடிருந்தார்.

இந்த நிலையில், Earl Spencer குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பில் ஜூன் 10 ஆம் திகதி விசாரணையைத் தொடங்கியதாக நார்தம்ப்டன்ஷைர் காவல்துறை அறிவித்தது. அத்துடன் அதே நாள் விசாரணை அதிகாரிகள் ஸ்டாஃபோர்ட் பகுதி பெண் ஒருவரை கைது செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நிபந்தனை ஜாமீனில்
இதையடுத்து அந்த பெண் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், விசாரணையின் முதற்கட்டத்தில் இருப்பதால், விரிவான தகவல் ஏதும் தற்போது வெளியிட வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான பெண்மணிக்கு 67 வயது என்றும், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். Maidwell Hall உண்டு உறைவிட பாடசாலையில் செலவிட்ட அந்த 5 ஆண்டுகளும் தாம் அனுபவித்த கொடுமைகளால், உளவியல் ரீதியாக மிகவும் பாதிகப்பட்டதாக கூறியுள்ள Earl Spencer,

இதன் விளைவாக 12 வயதில் இத்தாலியில் வைத்து ஒரு விலை மாதுவிடம் தமது கன்னித்தன்மையை இழந்ததாகவும் Earl Spencer தமது சுயசரிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இளவரசி டயானா தற்போது அடக்கப்பட்டுள்ள பகுதிக்கும் 10 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது Maidwell Hall உண்டு உறைவிட பாடசாலை.

Earl Spencer தமது சுயசரிதத்தில் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட Maidwell Hall, பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் தற்போது உண்மையை வெளியிட விரும்பினால், பொலிசாரை அணுகவும் கோரியிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.