;
Athirady Tamil News

தென்கொரியா வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழப்பு

0

தென்கொரியாவில் லித்தியம் மின்கல தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின் பின்னர் மூண்ட தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஐந்து பேர் காணாமல்போயுள்ள நிலையில் தேடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகருக்கு தென்மேற்காக உள்ள ஹவாசோங் என்ற தொழில்பேட்டையில் உள்ள அரிசெல்லின் மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் இந்த விபத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்கலங்கள் சேமித்துவைக்கப்பட்டிருந்த பகுதியொன்றில் வெடிப்பு இடம்பெற்றது தொடர்ச்சியாக அவை வெடித்தன் பின்னர் தீவிபத்து இடம்பெற்றது என தீயணைப்பு பிரிவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையிலிருந்து ஆறு உடல்கள் வெளியே கொண்டுவரப்படுவதை பார்த்தேன் கடும் தீ காரணமாக உயிரிழந்தவர்களை அடையாளம் காணமுடியாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.