;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்… திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

0

வவுனியா – மரக்காரம்பளை பகுதியில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கு பெரும் பதற்ற நிலையில் நிலவியுள்ளது.

இந்த தீ விபத்து இன்றையதினம் (24-06-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழில்சாலையில், பணி புரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்ற நிலையில் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

குறித்த தீ விபத்தையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப் பகுதி மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீர்தாரை வீசி நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இருப்பினும், தீ விபத்தில் தொழிற்சலை முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் நாசமாகியுள்ளது.

மேலும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.