;
Athirady Tamil News

வடக்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு “Education யாழ்ப்பாணம் மூன்றாவது அமர்வு

0

ICFS (International Centre for Foreign Studies) சர்வதேச வெளிநாட்டு கற்கை மையம் ஏற்பாடு செய்துள்ள ” Education யாழ்ப்பாணம்” மூன்றாவது அமர்வு 29 ஜூன் 2024 சனிக்கிழமை, வவுனியா பொது நூலகத்திலும் மறுநாள் 30 ஜூன் 2024 ஞாயிற்றுக்கிழமை – யாழ்ப்பாணம் பொது நூலக – கேட்போர் கூடத்திலும், ஜூன் மாதம் 29,30ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு வடக்கு மாகாணத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி மற்றும் மால்டா ஆகிய நாடுகளில் உள்ள கல்வி தொடர்பான தெரிவுகளையும், விருப்பங்களையும் ஆராய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் முயற்சியின் மூன்றாவது கட்டமாகும்.

“Education யாழ்ப்பாணம்” நிகழ்ச்சித் திட்டத்தின் சிறப்பு அம்சம் தலைநகர் மற்றும் கற்கை வசதிகளை கொண்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப் பட்ட கல்வி வாய்ப்புகளை, வடக்கு மாகாணத்திலுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர் களுடன் பகிர்ந்து கொள்வதேயாகும். இலங்கையர் அனை வருக்கும் சமமான கல்வி கிடைக்க ICFS எப்போதும் உறுதிபூண்டு செயலாற்றி வருகின்றமை குறிப்பிடக்கூடியதாகும்.

இங்கு முதன்மைப்படுத்தப்படுகின்ற கற்கைகளுக்காக நாடுகள் பாரிய பணச் செலவுகளை ஏற்படுத்தாத வகையிலும், நிதி பங்களிப்புகள் சலுகை அடிப் படையில் வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் அறிமுகப் படுத்துகின்றன.குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசி ல்கள், விண்ணப்பதாரர்களின் வசதியைக் கருத்திற் கொள்வதுடன் இந்தச் சந்தர்ப்பம் ஒரு சொற்ப அளவிலேயே “Education யாழ்ப்பாணம் மூலம் கிடைக் கும் சில தனித்துவமான வாய்ப்புகளாகும்.

இலங்கையில் தங்களுடைய குடும்பத்தை விட்டு வெளியேறத் திட்டமிடாத அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் Research Master options அவர்கள் சார்ந்து நிற்கின்றவர்களுடன் (Dependent Visa) இங்கிலாந்துக்குச் செல்லும் வாய்ப்பை அவர்கள் அறிமுகப் படுத்த முனைகின்றார்கள். அதேவேளை மால்டாவில் உயர் கல்விக்கான புதிய வாய்ப்பை Education யாழ்ப்பாணம் திட்டத்தின் ஊடாக இணைத்துக் கொள்ளும் மற்றொரு சிறப்பம்சமாகும். மாலடாவில் கல்வி செயற்பாடுகள் யாதெனில் மிகக் குறைந்த உத்தரவாதமான கல்விக் கட்டணத்தையும், ஷெங்கன் விசாவிற்கான அனுமதியினையும் வழங்குகிறது. இதன் மூலம் ஐரோப்பாவிற்குள் நீங்கள் தடம் பதிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்கிறது.
Education யாழ்ப்பாணம் முதலாவது அமர்வு 2024 மார்ச் 30-31 நடத்தப்பட்டது. இரண்டாவது அமர்வு 2024 30-31 யாழ்ப்பாணம் பொது நூலக – கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது இதன்போது பிரிட்டிஷ் பல்க லைக்கழகங்களில் கற்பதற்கான வாய்ப்புகளை விண்ணப்பதாரர்களுக்கு வழங்கியது. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையினரின் கோரிக்கைகளின் விளைவாக, அதில் கலந்து கொண்ட அனைவரின் விருப்பத் தேர்வுகளுடன் Education யாழ்ப்பாணம் மூன்றாவதுஅமர்வை ICFS நடாத்துகின்றது.
ICFS வடக்கில் உள்ள அனைத்து திறமையான மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை அதிகபட்சமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது.

அங்கு நீங்கள் இது தொடர்பிலான தொழில் வல்லுநர்களைச் சந்தித்து ICFS உடன் வெளிநாட்டில் கல்வியைத் தொடர உங்கள் எதிர்கால இலக்கை அடைவதற்கான வரைவை இங்கு சமர்ப்பிக்க முடியும். ICFS இன் இந்த செய லமர்வுக்கு எந்தவித நுழைவுக் கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என்பதையும், ICFS இன் ஆலோசனைகளுக்கு எவ்வித கட்டண வசூலிப்பும் இல்லை (No consultant fees) என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.இது வடக்கில் உள்ள தகுதி யான மாணவர்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

education Yaal panam 3 .வடக்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு (2)

You might also like

Leave A Reply

Your email address will not be published.