;
Athirady Tamil News

வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாறைகள்… நிலச்சரிவில் சிக்கிய சுவிஸ் கிராமம்: அதிரவைக்கும் காட்சிகள்

0

பெருவெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாறைகள், வீடுகள் மீது மோதியதில் சுவிஸ் கிராமம் ஒன்றில் ஒருவர் பலியாகியுள்ளார், இரண்டு பேரைக் காணவில்லை.

வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாறைகள்

சுவிஸ் கிராமமான Sorte என்னும் கிராமத்தில் கடந்த வாரம் பெருவெள்ளம் காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், மலையிலிருந்து தண்ணீர் ஓடிவருவதைத் தொடர்ந்து பெரிய பெரிய பாறைகள் உருண்டு வரும் காட்சி திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த நிலச்சரிவில் மூன்று பேர் சிக்கிய நிலையில், ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது, மாயமான மற்ற இருவரையும் தேடும் பணி தொடர்கிறது.

இதற்கிடையில், வெளியாகியுள்ள புகைப்படங்கள் நிலச்சரிவின் தீவிரத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.