;
Athirady Tamil News

தேர்தல் கால நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

0

தேர்தல் காலப்பகுதியில் அரசியற் கட்சிகள், வேட்பாளர்களை ஊக்கப்படுத்துகின்றவாறு அல்லது பங்கம் ஏற்படுகின்றவாறு செயலாற்றுவது தண்டனைக்குரிய ஒரு குற்றம் என தேர்தல் ஆணைக்குழு (Elction Commission) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,

” குறிப்பாக உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்களுக்கு போட்டியிடுவதற்கு பெயர்குறித்த நியமனப்பத்திரம் கையளித்துள்ள வேட்பாளர்களை அவ்வாறான கருமங்களுக்கு ஈடுபடுத்திக்கொள்வது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளும் தேர்தல் சட்டங்களும் சுற்றறிக்கைகளும் மீறப்படும் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும்.

எதிர்வரும் தேர்தல்களை சுதந்திரமானதும் நியாயமானதுமான விதத்தில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பணிப்புகளுக்கும் சுற்றறிக்கைகளுக்கும் அமைய செயலாற்றுமாறு அனைத்து திறத்தவர்களிடமும் தேர்தல் ஆணைக்குழு கோருகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.