;
Athirady Tamil News

கல்வி சாரா ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் : வெளியான தகவல்

0

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் இரண்டு மாத காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் (Suren Raghavan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (05) அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக கொடுப்பனவுகள்
அத்தோடு, அவர்கள் பணிக்கு சமூகமளிக்காத நாட்களை விடுமுறை நாட்களாக கருதி எவ்வித அபராதமும் இன்றி மீண்டும் பணிக்கு சமூகமளிக்கும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் குழப்பாமல் பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களை கேட்டுக்கொள்கிறேன் என சுரேன் ராகவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.