;
Athirady Tamil News

சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்… லண்டனில் தேடப்பட்ட நபர் கைது

0

பிரிஸ்டல் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் மனித உடல் பாகங்களுடன் இரண்டு சூட்கேஸ்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், தேடப்பட்டு வந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியிருப்பு ஒன்றில்
அவான் மற்றும் சோமர்செட் பொலிசாரே பிரிஸ்டல் ரயில் நிலையத்தில் இருந்து குறித்த 24 வயது நபரை சனிக்கிழமை அதிகாலையில் கைது செய்துள்ளனர்.

Clifton பாலத்தில் இரண்டு சூட்கேஸ்களில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், மேற்கு லண்டனில் குடியிருப்பு ஒன்றில் இருந்தும் பொலிசார் மனித உடல் பாகங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அந்த குடியிருப்பானது இரு நபர்களுக்கு சொந்தமானது என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைதாகியுள்ளது முக்கிய திருப்பம் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த நபரை லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும், இந்த வழக்கில் வேறு நபர்கள் மீது தற்போதைய சூழலில் சந்தேகம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

புதன்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் Clifton பாலத்தில் சூட்கேஸ்களுடன் ஒரு நபரின் நடவடிக்கையில் சந்தேகமிருப்பதாக அவான் மற்றும் சோமர்செட் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் உறுதி
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், இரண்டு சூட்கேஸ்களை மீட்டதுடன், அதில் மனித உடல் பாகங்கள் கண்டு திகைத்துள்ளனர். ஆனால் சம்பவயிடத்தில் இருந்து சந்தேக நபர் மாயமாகியிருந்தார்.

இதனிடையே மேற்கு லண்டனில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட, இரண்டு வழக்கிலும் தொடர்பிருப்பதை பொலிசார் உறுதி செய்தனர்.

தற்போது இந்த வழக்கில் தேடபப்ட்டுவந்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.