;
Athirady Tamil News

பிரித்தானியாவின் கென்ட் குருத்வாராவில் தாக்குதல்: 17 வயது சிறுவன் அதிரடி கைது

0

கென்ட் குருத்வாராவில் தாக்குதல் நடத்திய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருத்வாராவில் தாக்குதல்
தென் கிழக்கு பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு நானக் தர்பார்(Sri Guru Nanak Darbar) குருத்வாராவில் ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 17 வயது சிறுவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கென்ட் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கிரேவ்செண்ட்(Gravesend) பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு வியாழக்கிழமை மாலை நேரம் ஆண் ஒருவர் நுழைந்து, அங்கு இருந்தவர்களை தாக்க முயன்றதாக தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானதாக இல்லை என்றாலும், 2 பெண்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுவன் கைது
சந்தேக நபரான 17 வயது சிறுவன் கொலை முயற்சி மற்றும் மத ரீதியாக தூண்டப்பட்ட பொது ஒழுங்கு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்திலிருந்து ஆயுதமும் கைப்பற்றப்பட்டது.

இது தனித்த சம்பவம் என்றும், இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையில் வேறு யாரையும் தேடவில்லை என்றும் காவல்துறை விவரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.