;
Athirady Tamil News

பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலை குறைப்பு: நாளை விசேட அறிக்கை!

0

பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன (M.K Jayawardena) தெரிவித்துள்ளார்.

பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாணிற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) அண்மையில் தெரிவித்திருந்தார்.

இறுதித் தீர்மானம்
அதன்படி, பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் வெதுப்பக உற்பத்தியாளர்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதெனினும் விலை குறைக்கப்படுமா இல்லையா என நாளை (26) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், பாணின் விலை குறைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வர முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.