;
Athirady Tamil News

1 சதவீத பணக்காரர்களின் சொத்து 42 ட்ரில்லியன் டொலர் உயர்வு., வரியை உயர்த்த G20 நாடுகள் திட்டம்

0

உலகின் 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 42 ட்ரில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.

இது இலங்கை பணமதிப்பில் ரூபா 12,72,46,93,80,00,00,000 (ரூ.12,724 லட்சம் கோடி) ஆகும்.

ஆக்ஸ்பாம் (Oxfam) சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

இத்தொகை உலக மக்கள்தொகையில் பாதியின் மொத்த செல்வத்தை விட 36 மடங்கு அதிகம்.

அறிக்கையின்படி, இவ்வளவு சம்பாதித்தாலும், இந்த பணக்காரர்கள் தங்கள் மொத்த சொத்துக்களில் அரை சதவீத வரியை மட்டுமே செலுத்தியுள்ளனர், இது இன்றுவரை மிகக் குறைவு.

அதேசமயம், கடந்த நான்கு தசாப்தங்களில், இந்த பணக்காரர்களின் சொத்து ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7.1% அதிகரித்துள்ளது.

உலகின் மிகப் பாரிய பணக்காரர்கள் ஜி20 நாடுகளில் வாழ்கின்றனர். G20 இந்த ஆண்டு நவம்பரில் பிரேசிலில் நடைபெற உள்ளது, அங்கு இந்த பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது குறித்து விவாதிக்கப்படலாம்.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிப்பு
அறிக்கையின்படி, சமீபத்திய தசாப்தங்களில் பணக்காரர்களின் சொத்துக்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளன, ஆனால் அவர்கள் மீது விதிக்கப்பட்ட வரிகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

இதனால் ஏழை, பணக்காரன் என்ற இடைவெளி வெகுவாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் மிகக் குறைந்த பணத்தில் வாழ்கின்றனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இந்த வாரம் ஜி20 நிதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதன் போது பெரும் பணக்காரர்கள் மீதான வரியை அதிகரிப்பது குறித்து இந்த தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.

இதனுடன், தங்கள் வரி சேமிப்பு முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.

பிரேசில் வரிகளை அதிகரிக்க விரும்புகிறது, அமெரிக்கா ஆதரிக்கவில்லை
G20 தலைவர் பிரேசில் இந்த நாடுகளுடன் இணைந்து பணக்காரர்கள் மீது அதிக வரிகளை விதிக்க விரும்புகிறது. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை விரும்புகிறது.

பிரான்ஸ், ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் ஆப்பிரிக்க யூனியன் இதற்கு ஆதரவாக இருந்தாலும், அமெரிக்கா இதற்கு எதிராக உள்ளது.

இந்த அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் முதல் 1% பணக்காரர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 35 லட்சம் அதிகரித்துள்ளது, முந்தைய பத்தாண்டுகளில் அது ரூ.28 ஆயிரமாக மட்டுமே இருந்தது.

அதே நேரத்தில், இந்த தசாப்தத்தில் மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 50% மக்களின் சராசரி செல்வம் ஒவ்வொரு நாளும் 9 சென்ட் மட்டுமே அதிகரித்துள்ளது. இது இந்திய ரூபாயில் 50 பைசாவுக்கும் குறைவு.

இவ்வளவு சொத்துக்கள் குவிந்தாலும், இந்த பணக்காரர்களின் வரிப் பொறுப்பு குறைந்துள்ளது, இதனால் உலகம் முழுவதும் சமத்துவமின்மை அதிகரித்து வருவதாக அறிக்கை கூறியுள்ளது.

G20 அரசாங்கங்களுக்கு இது ஒரு பாரிய சோதனை என்று ஆக்ஸ்பாம் கூறுகிறது. பணக்காரர்களின் மொத்த சொத்துக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 8% வரி விதிக்கப்பட வேண்டும் என்று ஆக்ஸ்பாம் விரும்புகிறது.

பணக்காரர்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஆக்ஸ்பாமின் மேக்ஸ் லாசன் (Max Lawson) கூறுகிறார். ஆனால், அதற்கான தைரியத்தை அரசுகள் காட்டுமா என்பதுதான் கேள்வி.

லாசன் கூறுகையில், சமத்துவமின்மை அதன் உச்சத்தை எட்டியுள்ளது மற்றும் அதன் விளைவுகளிலிருந்து தங்கள் குடிமக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.