;
Athirady Tamil News

சீனாவை தாக்கிய பேய் சூறாவளி! 3,00,000 பேர் இடம்பெயர்வு

0

கெய்மி சூறாவளி தாக்கியதில் சீனாவின் கிழக்கு பிராந்தியத்தில் இருந்து 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெய்மி சூறாவளி
தைவானை தாக்கிய மிக வலிமையான சூறாவளி கெய்மி என்று கூறப்பட்டது. இது வியாழக்கிழமை நிலச்சரிவை ஏற்படுத்தியதுடன், தீவின் இரண்டாவது பாரிய நகரின் சில பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

இந்த நிலையில் சீனாவின் கிழக்கு மாகாணமான புஜியானில் கெய்மி (Gaemi) சூறாவளி நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது.

இது வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடிய கனமழைக்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து, 2,90,000க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் சில நகரங்களில் பொது போக்குவரத்து, அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் சந்தைகள் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.

ஊடகங்களால் வெளியிடப்பட்ட காட்சிகள்
இதேபோல் Zhejiang மாகாணத்தில் வீதிகள் ஆறாக மாறியதையும், சாலைகளில் மரங்கள் சிதறிக்கிடப்பது போன்ற மாநில ஊடகங்களால் வெளியிடப்பட்ட காட்சிகள் தெரிவிக்கின்றன.

இதனால் Wenzhou நகரம் மழை புயல்களுக்கான மிக உயர்ந்த எச்சரிக்கையை வெளியிட்டது மற்றும் கிட்டத்தட்ட 7,000 மக்களை வெளியேற்றியது.

இதற்கிடையில் நாட்டின் பிரதான நிலப்பரப்பில் இதுவரை இறப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.