;
Athirady Tamil News

இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் திடீரென உயிரிழந்த சுங்க அதிகாரி!

0

இலங்கையில் உள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் விமான நிலையத்தின் ஓய்வறையில் இருந்தபோது உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ருக்மலே, பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்தல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.