;
Athirady Tamil News

யாழில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

0

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று(30.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய கந்தையா செல்லச்சாமி என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை
குறித்த முதியவரும் அவரது மனைவியும் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரது மனைவி இன்று(30) காலை வெளியே சென்றிருந்தவேளை அவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.

அத்துடன், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.