;
Athirady Tamil News

முல்லைத்தீவில் வெளிநாடு செல்ல தயாரான இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

0

முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்திலிருந்து இன்று (30.07.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொலைபேசி வேலை செய்யவில்லை
நேற்று (29) பிற்பகல் ரூபா 20 இலட்சம் பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை எனவும் நண்பர்கள் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட சடலம்

பின்னர் குறித்த இளைஞனின் தொடர்பு கிடைக்காத நிலையில் அவனது நண்பர்கள் தேடியபோது இன்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் கரையில் மோட்டார் சைக்கிள் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேடியதை தொடர்ந்து வவுனிக்குளத்தின் மூன்றாது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) உடலம் இனங்காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன்குளம் காவல்துறையினர், நீதிபதி முன்னிலையில் உடலத்தினை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணையினையும் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.