;
Athirady Tamil News

செல்ல நாய்க்கு அளவுக்கு அதிகமாக உணவளித்தவருக்கு ஏற்பட்ட நிலை

0

நியூசிலாந்தில் (new zealand) பெண் ஒருவருக்கு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதற்குக் காரணம், அவர் தனது செல்ல நாய்க்கு வரம்பில்லாமல் உணவளித்ததால், அந்த நாய் கொழுப்பு கூடி இறுதியில் இறந்துவிட்டது.

இறக்கும் போது நாய் 53 கிலோ எடையில் இருந்ததாக கூறப்படுகிறது.

நாய் வளர்க்க தடை

விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு வழக்கறிஞர் நுகையின் சார்பாக அதன் உரிமையாளரைக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தலையிட்டார்.

சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, உரிமையாளருக்கு NZ$720 அபராதம் விதிக்கப்பட்டதுடன் மற்றும் நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.