;
Athirady Tamil News

வடகொரிய ஜனாதிபதியாக கிம் ஜாங் உன்னின் மகள்: கசிந்த தகவலால் பரபரப்பு

0

வடகொரியாவின் (North Korea) அடுத்த அரசியல் வாரிசாக ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un ) மகள் ஜு ஏ (Ju-ae) வரலாம் என செய்திகள் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவின் (South Korea) உளவு நிறுவனம் ஒன்று வடகொரியாவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.

இதேவேளை, வட கொரிய ஜனாதிபதி கிம், பொது இடங்களுக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் சென்று, இப்போதே பயிற்சி அளித்து வருகிறதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி பொறுப்பு
அதன் படி, வடகொரியாவின் ஜனாதிபதியாக 2011 இல் பதவியேற்ற கிம், ஜனாதிபதி பொறுப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருவதாக குறிப்பிடப்படுகிறது.

எனினும், அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டலும் விடுத்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியிருக்கின்றமை சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.