;
Athirady Tamil News

23 இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றால் விடுவிப்பு

0

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 23 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 64 மீனவர்களின் வழக்கு 15 விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் இடம்பெற்றது.

இவர்களில் ஜூன் 16 மற்றும் 22 ஆம் திகதிகளில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 மீனவர்களில் 23 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர், இரண்டாவது தடவையாகவும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் விடுவிக்கப்பட்ட 23 பேரில் மூவர் படகு உரிமையாளர்கள் என்பதுடன், அவர்களுக்கு தலா 4 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்தத் தவறும் பட்சத்தில், 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் கைப்பற்றப்பட்ட 3 படகுகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர, கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட 25 மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும். 6ஆம் திகதி வரையும், கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட 13 மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.