;
Athirady Tamil News

பிரித்தானிய மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல்: குற்றவாளிக்கு நீதிபதி எச்சரிக்கை

0

பிரித்தானியாவில் பயணி ஒருவரை தண்டவாளத்தில் தள்ளிய வீடற்ற மனிதன் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொலை முயற்சி தாக்குதல்
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் மெட்ரோ நிலையத்தில் பயணி ஒருவரை திடீரென தண்டவாளத்தில் தள்ளிய ஒரு வீடற்ற மனிதன் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2023 பிப்ரவரி 3ம் திகதியன்று 24 வயதான குர்திஷ் குடியேற்றவாதியான ப்ருவா ஷோர்ஷ்(Brwa Shorsh) என்ற நபர், 61 வயதான தபால்காரர் டேடீஸ் போடோசெக்கை(Tadeusz Potoczek) ரயில் நிலையத்தில் வைத்து தாக்கினார்.

அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளில், ப்ருவா ஷோர்ஷ் தண்டவாளத்திற்கு முன் நின்று கொண்டிருந்த தபால்காரர் போடோசெக்கை கடுமையாக தள்ளியதில் அவர் தண்டவாளத்தில் தடுமாறி விழுவது தெளிவாக தெரிகிறது.

அதிர்ஷ்டவசமாக, ரயில் வருவதற்கு முன் போடோசெக் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பிப் பிழைத்தார்.

நீதிமன்ற தீர்ப்பு
நீதிமன்றத்தில் 24 வயதான ப்ருவா ஷோர்ஷ், தன்னை அவனமானப்படுத்தும் செயலைக் கண்டித்து தாக்கியதாக தெரிவித்தார்.

ஆனால், குற்றவாளி திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியதாக குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

இறுதியில், ப்ருவா ஷோர்ஷை குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், இந்த குற்றத்தை மிகவும் தீவிரமானது என்றும் ஷோர்ஷ்க்கு நீண்ட கால சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

தண்டனை செப்டம்பர் 26 திகதி அன்று விதிக்கப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.