யாழில் பேருந்தில் பயணித்த வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டவர்களின் 11 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பேருந்தில் யாழ்.நகர் பகுதிக்கு வந்து திரும்பிய போதே அவர்களின் நகைகள் களவாடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.