;
Athirady Tamil News

பாடசாலை சிறுவர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்கும் சாரதிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

0

பாடசாலை சிறுவர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக போக்குவரத்து சேவை வழங்கும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான விழிப்பணர்வுச் செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்(31.07.2024) யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் சிறுவர் துஸ்பிரயோகங்களை அடையாளம் காணுதல், சிறுவர்களுக்கான பாதுகாப்பான பயணம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக சாரதிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், உதவி ஆணையாளர் மோட்டார் போக்குவரத்து திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை, மாவட்டச் செயலக பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.