;
Athirady Tamil News

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் சடலம் ஒன்று மீட்பு

0

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் முல்லைத்தீவு பொலிஸாருக்கு பிரதேச வாசிகளால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து இன்று (03.08.2024) அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணை
இதன்போது, உயிரிழந்தவர் திருகோணமலையினை சேர்ந்தவர் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்த நபர் கடற்றொழிலாளர் என்றும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் தெரியவில்லை என்றும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.