;
Athirady Tamil News

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (03) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலில் பூமிக்கடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பு
குறித்த நிலநடுக்கத்தினால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், நிலநடுக்கத்துக்குப் பிந்திய நிலஅதிர்வுகள் ஏற்படக்கூடும் என பிலிப்பைன்ஸ் நிலநடுக்க ஆய்வு நிறுவனம் எச்சரிகை விடுத்துள்ளது.

பிலிப்பைன்ஸ் பசிபிக் பெருங்கடலின் ‛ரிங் ஓப் ஃபயர்’ எனும் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்கள் அடிக்கடி நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.