;
Athirady Tamil News

கம்பஹா பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

0

கம்பஹா – தம்மிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நேற்று (06) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை குறிவைத்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இவ்வாறு காயமடைந்த நபர் உடுகம்பொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.