;
Athirady Tamil News

நாட்டில் அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்கள் : வெளியான தகவல்

0

நாட்டில் 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் புதிய தனியார் நிறுவனங்கள் தமது பதிவுகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது நிறுவன பதிவாளர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 12,651 புதிய வணிக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர்
2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 10,520 புதிய நிறுவனங்களும் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 1,899 புதிய நிறுவனங்களும் பதிவு இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால் தொழில்முனைவோர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.