;
Athirady Tamil News

பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு! 5 பேரின் உடல்கள் மீட்பு..பேரிடரை சந்தித்த மாநிலம்

0

இந்திய மாநிலம் இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கொட்டித்தீர்த்த கனமழை
கடந்த சூலை 31ஆம் திகதி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித் தீர்த்ததால் 3 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.

30 பேர் மாயமானதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து 6 பேர் பலியானதாக தெரிய வந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பலி எண்ணிக்கை நீண்டது.

பலி எண்ணிக்கை
இந்த நிலையில் சிம்லாவின் டோக்ரி பகுதியில் 4 பேரின் உடல்களும், நோக்லியில் ஒரு உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் குல்லு மாவட்டத்தின் சமேஜ் எனும் கிராமத்தில் 20 பேர் மாயமாகினர்.

ஆனால் அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. ராம்பூர் மாவட்டத்தில் மட்டும் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.