;
Athirady Tamil News

கொழும்பு – பம்பலப்பிட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் சடலமாக மீட்பு

0

கொழும்பு (colombo) – பம்பலபிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து நபரொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பம்பலபிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.