;
Athirady Tamil News

பங்களாதேஷில் போராட்டத்தின் எதிரொலி : பதவி விலகினார் உச்ச நீதிமன்ற நீதிபதி

0

மாணவர் அமைப்பினரின் தீவிர போராட்டத்தால் பங்களாதேஷின் (Bangladesh) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1971 பாகிஸ்தான் (Pakistan) போரால் உயிரிழந்த வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக மாணவர் அமைப்பினர் அண்மையில் போராட்டம் நடத்தினர்.

மாணவர் அமைப்பினரின் இந்த போராட்டத்துக்கு பணிந்த ஷேக் ஹசீனா (Sheikh Hasina), பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவில் (India) அடைக்களமானார்.

தலைமை நீதிபதி
இதையடுத்து மாணவர் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் (Muhammad Yunus) இடைக்கால அரசின் தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளராக கூறப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் (Obaidul Hassan) பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த கோரிக்கையுடன் வங்கதேச உச்சநீதிமன்றத்திற்குள் நுழைந்த மாணவர்கள், தலைமை நீதிபதி ஒரு மணி நேரத்தில் பதவி விலக கெடு விதித்த நிலையில், நெருக்கடி அதிகரித்தமையினால் பதவி விலகுவதாக அறிவித்து ஒபைதுல் ஹாசன் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.