;
Athirady Tamil News

மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்…!

0

அனுராதபுரம் பகுதியில் வைத்தியரொருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது இன்று (12.8.2024) அனுராதபுரம் (anuradhapura) – ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொள்ளாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் சாமர சதுரங்க (38வயது) எனவும் தெரிய வந்துள்ளது.

காவல்துறையினர் விசாரணை
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, வைத்தியரின் மனைவி தமுத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஹொரவ்பொத்தானை காவல் பிரிவிற்குட்பட்ட மொரகேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வைத்தியரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.