;
Athirady Tamil News

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: வேட்புமனுவில் கையெழுத்திட்ட அனுர

0

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இன்று (12) காலை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வேட்பாளர்கள் கட்டுப்பணம்
இதேவேளை,2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

மேலும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த தேர்தலில் செலவு செய்யும் பணமும் அதிகரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.