;
Athirady Tamil News

ஆசிரிய உதவியாளர் நியமன பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: வடிவேல் சுரேஷ் உறுதி

0

பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு எழுந்துள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படவுள்ளதாக தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) நேற்று (12.8.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், 2,300 ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி உறுதியளித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

நாளாந்த சம்பளம்
அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ 1,700 ஆக உயர்த்துவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர் இதற்காக பாடுபட்ட முன்னாள் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் (Manusha Nanayakara) அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு அப்பால் தோட்ட வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.