;
Athirady Tamil News

யாழில் திருட்டில் ஈடுபடும் நபரின் காணொளிகளை வெளியிட்டுள்ள பொலிஸார்

0

யாழில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தின் நல்லூர், மானிப்பாய், கோப்பாய், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்மைக் காலமாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கிற நிலையில் அவை தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், சில தினங்களிற்கு முன்னர் வீடொன்றில் பதிவான CCTV காணொளிகளில் நபர் ஒருவர் திருட்டில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளன

இதனால் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு கேட்டுள்ள பொலிஸார், அவ்வாறு தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.