;
Athirady Tamil News

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

0

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்று மதியம் (14.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் (12.08.2024) தீடீரென காணாமல் போயிருந்தார்.

நீர்தேக்கத்தில் மிதந்த சடலம்
இந்த நிலையில் குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர்கள் முன்னெடுத்த போதும் அது பயனளிக்கவில்லை.

அதன்பின்னர் நேற்றைய தினம் (13.08.2024) தலவாக்கலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதேவேளை குறித்த இளைஞன் இன்று (14) மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் சடலமாக மிதந்து கொண்டு இருந்ததை பிரதேசவாசிகள் கண்ட நிலையில் தலவாக்கலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை
அதனையடுத்து, சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞன் தலவாக்கலை மேற்பிரிவு தோட்டப்பகுதியைச் சேர்ந்த 24வயதான டி.மதுஸான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.