;
Athirady Tamil News

இந்தியாவில் விற்கும் சர்க்கரை, உப்பில் மைக்ரோபிளாஸ்டிக்.., ஆய்வில் வெளியான அதிர்ச்சி

0

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

உப்பு மற்றும் சர்க்கரை
சமையலில் சர்க்கரையும் உப்பும் சுவையை சேர்க்கக்கூடிய பொருட்களில் முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் கலந்திருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் Toxics Link என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. கடைகள் மற்றும் ஒன்லைன் மூலமாக வாங்கிய சர்க்கரை மற்றும் உப்பு வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கையை தயாரித்துள்ளது.

இந்த அறிக்கையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிராண்டு சர்க்கரை மற்றும் உப்பில், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1 கிலோ தூள் உப்பான அயோடின் கலந்த உப்பில் 89.15 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 1 கிலோ கல் உப்பான ஆர்கானிக் உப்பில் 6.70 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன.

1 கிலோ ஆர்கானிக் சர்க்கரையில் 11.85 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. அதாவது, 0.1 mm முதல் 5 mm அளவில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.