;
Athirady Tamil News

முல்லைத்தீவில் பெண்ணொருவரின் தங்க சங்கிலி கொள்ளை

0

முல்லைத்தீவு (Mullaitivu) வண்ணாங்குளம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணை வீதியில் தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (14.08.2024) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
முல்லைத்தீவு வண்ணாங்குளம் கிராமத்தில் இருந்து உண்ணாப்பிலவு வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்கு சென்ற வயோதிப பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த 25, 24 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுண் தங்கசங்கிலியினை அறுத்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.