;
Athirady Tamil News

சற்றுமுன் வெளியானது ஜனாதிபதியின் தேர்தல் சின்னம்

0

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சின்னத்தை ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) சற்றுமுன்னர் வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று (15) காலை 9.00 மணிக்கு ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரனின் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.