;
Athirady Tamil News

தாய்வானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

தாய்வானில் (taiwan) 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது நேற்று (15.8.2024) தாய்வானில் யிலான்( Yilan ) மாகாணத்திலிருந்து தென்கிழக்கே உள்ள கடற்கரையை அண்மித்த பகுதியில் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம்
இந்நிலநடுக்கம் 44 கிலோமீற்றர் தொலைவில் கடலில் 11 கிலோமீற்றர் ஆழம் குறைந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இதனால், தலைநகர் தாய்பேயில் உள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டவில்லை என தாய்வானின் தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.